25,000 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை... உச்ச நீதிமன்றம் அதிரடி!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,000 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிய கடந்த 2016ம் ஆண்டு 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கு வங்கத்தில் அரசு நடத்தும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என்று ஏப்ரல் 22 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

இந்த உத்தரவை எதிர்த்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐ விசாரித்து வரும் 8000 ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு இறுதியாக நிரூபிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு என்றும், அவர்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி 12 சதவீத வட்டியுடன் சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடரும், ஆனால் பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது என்று நீதிமன்றம் கூறியது.

நீதிபதி உத்தரவு
நீதிபதி உத்தரவு

இந்த வழக்கின் விசாரணையின்போது தலைமை நீதிபதி சந்திரசூட், "ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது மாநில அரசு ஏன் கூடுதல் பதவிகளை உருவாக்கி, காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களை நியமித்தது?” என கேள்வியெழுப்பினார்.

அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், "அனைத்து ஆசிரியர் நியமனங்களும் சட்ட விரோதமானவை என்பது சிபிஐ வழக்கு கூட அல்ல. ஆசிரியர் - மாணவர் விகிதமே இத்தகைய நியமனத்துக்கு காரணம்" என்றார். மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதிடுகையில், “உயர் நீதிமன்ற அமர்வுக்கு வேலைகளை ரத்து செய்வதற்கான அதிகார வரம்பு இல்லை. அதன் உத்தரவுகள் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுடன் முரண்படுகின்றன” என்றார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி, ஓஎம்ஆர் தாள்கள் மற்றும் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் அழிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். மேலும், "இதுபோன்ற முக்கியமான விஷயத்துக்கு ஏன் டெண்டர் விடவில்லை?” என தலைமை நீதிபதி கேட்டார்.

அதைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விண்ணப்பதாரர்களிடம் பள்ளி சேவை ஆணையம் தன்னிடம் தரவுகள் இருப்பதாக தவறாக கூறியுள்ளதா என தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெய்தீப் குப்தா, "தரவுகள் எதுவும் தற்போது இல்லை. ஆனால் அது இருக்கலாம்" என்று பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், “இது முறையாக நடந்த மோசடி. பொது வேலைகள் இன்று மிகவும் பற்றாக்குறையாக உள்ளன. மேலும் அவை சமூக இயக்கத்துக்காக பார்க்கப்படுகின்றன. நியமனங்கள் மோசடியானதாக இருந்தால் அமைப்பில் (சிஸ்டம்) என்ன இருக்கும்? மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள். இதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in