கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாக்களித்த தொண்டர் கை, தலை ஆகிய இடங்களில் அரிவாள், கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் 14 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. கோலார்மக்களவைத் தேர்தலில் நேற்று மாலை வாக்குப்பதிவின் போது கைகலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார், தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு வாக்களித்த கோவர்த்தனா என்ற அக்கட்சி தொண்டரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்மநபர்கள் வெட்டியுள்ளனர். இதில் கோவர்த்தனாவின் கைவிரல்கள், தலை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிந்தாமணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கனிஷெட்டிஹள்ளி கிராமத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் கோவர்த்தனா வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து படுகாயமடைந்த கோவர்த்தனா, சிந்தாமணி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மஞ்சுநாதா, கணேஷ், மகேஷ் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிந்தாமணி கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவர்த்தனாவை மதச்சார்பற்ற ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணாரெட்டி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான கட்சி தொண்டர்களிடம் அவர் நலம் விசாரித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!
700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்
ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!
தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்