ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

குற்றம்
குற்றம்

சென்னையில் ஜன்னல் கம்பியில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது, கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், எழில்நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா(38), இவரது மனைவி சரண்யா. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் அஸ்வந்தி(8) அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார் ‌.

தற்போது பள்ளி‌ விடுமுறை என்பதால், நேற்று மகளை வீட்டில் விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

ஊஞ்சல் கட்டி
ஊஞ்சல் கட்டிகோ[ப்பு படம்

உடனே இருவரும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்த போது மகள் அஸ்வந்தி ஜன்னலில் கட்டி இருந்த ஊஞ்சல் கயிறு மற்றும் துண்டு கழுத்தில் சுற்றிய நிலையில் மயங்கி தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபோது, குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மரணம்
மரணம்

பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீஸார் சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in