பெங்களூருவில் சிக்னலில் காத்திருக்கும் போது, ஒரு பெண் ஸ்கூட்டரில் மொபைல் போனை பொருத்தி, ஜூம் மீட்டிங்கில் இணைந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு என்றாலே இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலும் சேர்ந்தே நமக்கு ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளது. பெங்களூரு டிராஃபிக் சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணம் உள்ளன.
அதே நேரத்தில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும்போது, வாகன ஓட்டிகள் செல்போனில் போசுவது, பாட்டுக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் சர்வ சாதாரணமாக காண முடியும். தற்போது இதில் உச்சகட்டமாக ஒரு பெண், பரபரப்பான பெங்களூரு சிக்னலில் காத்திருக்கும்போது, ஜூம் மீட்டிங்கில் இணைந்திருந்த வீடியோ எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிக்னலில் ஸ்கூட்டரில் காத்திருக்கும் ஒரு பெண், வண்டியில் பொருத்தியுள்ள தனது ஸ்மார்ட்போனில் ஜூம் அழைப்பில் இணைந்துள்ளதை காண முடிகிறது. மேலும், வீடியோவில், 'வொர்க் ஃப்ரம் டிராஃபிக். பெங்களூருவில் ஒரு சாதாரண நாள்.’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எனினும், வாகனம் ஓட்டும்போது சாலை விதிகளை 100 சதவீதம் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே போக்குவரத்து போலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகும்.
இதையும் வாசிக்கலாமே...
வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!
இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ