மன்பூரில் செல்போன் வெடித்ததால், டூவீலரில் சென்ற இளம்பெண் வாகனம் டிவைடரில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நெஹ்ராரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா (28). இவர் டூவீலரில் கான்பூர் - அலிகார் நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் செல்போன் இருந்தது. மன்பூர் பெட்ரோல் பங்க் முன் அவர் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது பூஜா பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பூஜாவின் டூவீலர் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலையில் இருந்த டிவைடரில் பூஜாவின் டூவீலர் மோதியது. அப்போது பூஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்த சௌபேபூர் காவல் நிலைய போலீஸார், படுகாயமடைந்த பூஜாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஹெல்மெட் அணியாத பூஜா டூவீலரில் அதிவேகத்தில் இயர்போனில் பேசிக்கொண்டே வந்ததாகவும், அப்போது செல்போன் திடீரென வெடித்து அதனால் அவர் வண்டி நிலைகுலைந்து டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. ஆனால், அதிக ரத்தம் வெளியேறியதால் பூஜா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் வெடித்து அதனால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!
700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்
ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!
தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்