கோயில் திருவிழாவில் மதம் பிடித்த யானை... பதறியடித்து ஓடிய பக்தர்கள்... அதிர்ச்சி வீடியோ!

கோயில் திருவிழாவில் திடீரென மதம் பிடித்த யானை
கோயில் திருவிழாவில் திடீரென மதம் பிடித்த யானை

கேரளாவில் கோயில் திருவிழாவிற்கு அழைத்து வரப்பட்ட யானை ஒன்று திடீரென மதம் பிடித்து மற்றொரு யானையை தாக்க முயற்சித்து கூட்டத்திற்குள் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

கேரளா மாநிலம், திருச்சூர் மாநிலத்தில் தற்போது ஏராளமான கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாக்களின் முக்கிய பகுதியாக யானைகள் அழைத்து வரப்பட்டு சுவாமி சிலைகளைச் சுமந்து செல்லும் ’ஆராட்டு’ எனும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சூர் அருகே உள்ள தரக்கல் கோயிலில் ’உப்பச்சரம் சொல்லல்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக குருவாயூர் ரவிகிருஷ்ணன் என்ற யானை மற்றும் புதுப்பள்ளி அர்ஜுனன் என்ற யானை உள்ளிட்ட யானைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. நேற்று இரவு 10.30 மணி அளவில் விழாவின் முக்கிய நிகழ்வான ’அம்மா திருவடி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென குருவாயூர் ரவிகிருஷ்ணன் யானைக்கு மதம் பிடித்து தறிகெட்டு ஓடத் துவங்கியது. அத்துடன் அருகில் இருந்தவர்களை யானை தாக்க முயற்சித்த போது, யானையின் பாகன் ஸ்ரீகுமார் (53) என்பவர் நூலிழையில் உயிர்தப்பினார். யானை திடீரென தறி கேட்டு ஓடியதால் அருகில் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடினர். இதில் பலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த யானையையும் தாக்கியதால் பரபரப்பு
அருகில் இருந்த யானையையும் தாக்கியதால் பரபரப்பு

இதனிடையே மதம் பிடித்த ரவிகிருஷ்ணன் யானை அருகில் இருந்த புதுப்பள்ளி அர்ஜுனன் என்ற யானையை தாக்கியது. இதில் ஆத்திரமடைந்த அர்ஜுனன் யானையும் ரவிகிருஷ்ணன் யானையை திரும்ப தாக்கத் துவங்கியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அர்ஜுனன் யானையின் பாகன் அந்த யானையை அங்கிருந்து அழைத்து சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடிய ரவிகிருஷ்ணன் யானையை, யானை பாகன்கள் சாந்தப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தஞ்சையில் வீதி, வீதியாக நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு... ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது!

சரோஜாதேவி கால்ஷீட்டுக்கு காத்திருந்த எம்.ஜி.ஆர்!

10வது வேட்பாளரையும் அறிவித்தது பாமக... காஞ்சிபுரத்தில் களமிறங்குகிறார் ஜோதி வெங்கடேசன்!

அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட திடீர் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in