அதிர்ச்சி.... ரகசிய காதலை கைவிட மறுத்த கணவன்... பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த மனைவி!

பிரவீன், லலிதா
பிரவீன், லலிதா

திருமணத்தை மீறி ரகசிய உறவு வைத்திருந்த கணவர், அதை கைவிட மறுத்ததால் தூங்கிக் கொண்டிருந்தபோது  பாம்பை விட்டு கடிக்கச்செய்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி அருகே உள்ள மார்கண்டேய காலணியைச் சேர்ந்தவர் பிரவீன் (42). இவரது மனைவி லலிதா (34). இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

பத்திரிகையாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிரவீன் ரியல் எஸ்டேட், வியாபாரம், கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் என படிப்படியாக உயர்ந்துள்ளார். தொழில் நிமித்தமாகப் பல இடங்களுக்குச் சென்று வந்த பிரவீன் கோதாவரிகனி பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.

இந்த விஷயம் லலிதாவிற்குத் தெரியவந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக பிரவீன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்ததாகத் தெரிகிறது. மதுபோதைக்கு அடிமையான பிரவீன் மனைவி, மற்றும் பிள்ளைகளைச் சரிவர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த லலிதா கணவனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.

இந்தநிலையில் பிரவீனிடம் வேலை பார்த்து வரும் ராமகுண்டம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ் (37) என்பவரிடம் தன் கணவரின் நடத்தை குறித்தும் குடும்ப பிரச்சினையைக் கூறி கணவனைக் கொலை செய்ய உதவி கேட்டுள்ளார். பயந்து போன சுரேஷ்  ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். பின்னர் அவரிடம்  அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட் இலவசமாகத் தருவதாக லலிதா ஆசை காட்டியுள்ளார். அதனையடுத்து சுரேஷ் கொலை செய்யச் சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ் (25), மந்தமரியை சேர்ந்த நன்னபராஜு சந்திரசேகர் (38), பீமா கணேஷ் (23) மாசு ஸ்ரீனிவாஸ் (33) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளனர். பிரவீன் வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அப்போது லலிதா சுரேஷை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். 

அங்கு வந்த சுரேஷ் மற்றும் நண்பர்கள் உறங்கிக் கொண்டிருந்த பிரவீனின் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பாம்பை விட்டுக் கடிக்க வைத்துள்ளனர்.  பிரவீன் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பிரவீன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக லலிதா நாடகமாடியுள்ளார். உடலை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளனர். பிரவீனின் உடலில் பாம்பு கடித்ததால் விஷம் உடலில் ஏறி நிறம் மாறியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரவீன் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லலிதாவிடம்  போலீஸார்  விசாரணை நடத்தினர். 

பயந்துபோன லலிதா கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து லலிதா, சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அனைவரின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், 6 செல்போன்கள், 5 சவரன் தங்கச்செயின் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in