சேலம் : வாக்களிக்க வரிசையில் நின்றவர்களில் 2 பேர் உயிரிழந்த சோகம்!

வாக்குச்சாவடியில் உயிரிழந்த பழனிச்சாமி
வாக்குச்சாவடியில் உயிரிழந்த பழனிச்சாமி

சேலம் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றிருந்தவர்களில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 27.63 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதே போல் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 17.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு
முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

இதனிடையே சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சூரமங்கலம் பகுதியில், தனியார் பள்ளி ஒன்றில் மனைவியுடன் வாக்களிக்க வந்த பழனிச்சாமி என்பவர் வரிசையில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவ பணியாளர்கள் அவரை பரிசோதித்தனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனால் வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வாக்குச்சாவடியில் உயிரிழந்த சின்னபொண்ணு
வாக்குச்சாவடியில் உயிரிழந்த சின்னபொண்ணுBG

இதே போல் சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க ஏராளமானோர் இன்று காத்துக் கொண்டிருந்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸார் அவரிடம் இருந்த உடைமைகளை பரிசோதித்த போது, அவரது பெயர் சின்னபொண்ணு (77) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in