நண்பரின் 15 வயது மகள் பலாத்காரம்... இந்திய கடலோர காவல் படையினர் 2 பேர் கைது!

சிறுமி பலாத்காரம்
சிறுமி பலாத்காரம்

மும்பையில் தங்கள் சக ஊழியரின் 15 வயது மகளைப் பலாத்காரம் செய்ததாக இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை காவல் துறை
மும்பை காவல் துறை

மகாராஷ்டிரா மாநிலம், வடக்கு மும்பையின் புறநகர்ப் பகுதியில் கடலோர காவல்படையினர் குடும்பத்தினர் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. சக படைவீரர்கள் என்பதால் குடும்ப ரீதியாகவும் இவர்களிடையே இணக்கம் உள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஒருபடைவீரரின், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தார். அவரது தந்தை இரவுப் பணிக்கு சென்றுவிட்டார். சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர்.

அப்போது அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் 30 வயது மற்றொரு படைவீரர், இந்த சிறுமியின் வீட்டுக்கு வந்து, அவரது மனைவி அழைப்பதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

சிறுமியும், இவர்கள் குடும்ப நண்பர்கள் தானே என்ற எண்ணத்தில் அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றதும் 30 வயது நபர் வீட்டின் கதவை பூட்டிவிட்டார். மேலும் அங்கு ஏற்கெனவே தயாராக இருந்த மற்றொரு 23 வயது படைவீரரும் சேர்ந்து கொண்டிருந்தார். பின்னர் இருவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

மேலும், இது தொடர்பாக வெளியில் சொன்னால் சிறுமியையும், அவரது தந்தையையும் கொலை செய்துவிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். இந்நிலையில், அண்மையில் அச்சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 8-ம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மும்பை போலீஸில் புகார் அளித்தார். இதேபோல், துறை ரீதியாகவும் கடலோர காவல் படையில் சம்பந்தப்பட்ட இரு படைவீரர்களின் குற்றச்செயல் குறித்து சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.

கைது
கைது

இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு ‘376 டிஏ' மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ், கூட்டு பலாத்காரம் செய்ததாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாக மும்பை போலீஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.

சக கடலோர காவல் படையைச் சேர்ந்த சகவீரரின் குழந்தையை, உடன் பணிபுரியும் வீரர்களே பலாத்காரம் செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!

மக்களவையில் விவாதங்கள் மற்றும் கேள்விகள் கிளப்பியதில்... தமிழக எம்பிக்களின் ஸ்கோர்கார்டு இதுதான்!

குட் நியூஸ்... 60 நாட்களுக்கு முன்பே அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்!

மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி நடத்துகிறார்... ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

நடிகர் மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்... இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in