
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்களைக் கொன்று பிணைக் கைதிகளாகவும் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உடல்களை திறந்த லாரிகளில் ஏற்றி ஊர்வலம் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலஸ்தீன போராளிகளான ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் எல்லைக்குள் இன்று காலை முதல் திடீர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எல்லை நெடுக இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றுக்கு அப்பால், காஸாவிலிருந்து ஏவப்படும் ஆயிரக்கணக்கிலான ஏவுகணைகளால் இஸ்ரேல் எல்லைக்குள்ளும் பதற்றம் சூழ்ந்துள்ளது.
மோதல் ஆரம்பித்த 20 நிமிடங்களில் ஆயிரக்கணக்கிலான ராக்கெட்டுகளை இஸ்ரேல் எல்லைக்குள் ஏவி ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் தரப்பில் 5000 என்றும், சர்வதேச ஊடகங்கள் சார்பில் 2000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் எனவும் கணக்கு சொல்கிறார்கள். இந்த திடீர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் போருக்குத் தயார் என அறிவித்ததோடு, பதிலடி மற்றும் நேரடி மோதல்களை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஒரு இஸ்ரேலிய பெண்ணின் அரை நிர்வாண சடலத்தை திறந்த டிரக்கில் எடுத்துக்கொண்டு நகரத்தில் அணிவகுத்துச் செல்லும் கொடூரமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்களை கொன்று பிணைக் கைதிகளாக பிடித்து வருவதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உடல்களை திறந்த லாரிகளில் ஏற்றி ஊர்வலம் செல்லும் காட்சிகளும் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!