10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் விபரீதம்... மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை

உயிரிழந்த மாணவி குமாரி
உயிரிழந்த மாணவி குமாரி

திருத்தணி அருகே 10ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மேல் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி. இவரது மகள் குமாரி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார். இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் 187 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில் அவர் 10 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.

திருத்தணி அரசு மருத்துவமனை
திருத்தணி அரசு மருத்துவமனை

இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் கவனிக்காத போது, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி குமாரி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் கண்ணீர் விட்டு கதறும் பெற்றோர் மற்றும் உறவினர்கள்
மருத்துவமனையில் கண்ணீர் விட்டு கதறும் பெற்றோர் மற்றும் உறவினர்கள்

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in