சமயபுரம் கோயில் தேர்த் திருவிழாவின்போது 15 பேரிடம் செல் போன் பறிப்பு மற்றும் 12 பவுன் தங்க நகைகள் திருட்டு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 15 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. மேலும், நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் (55) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
இதேபோல் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த லட்சுமியிடம் (60) இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி கைச்செயின் திருட்டுபோனது. மேலும், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஓமாந்தூர் கீழப்பட்டியை சேர்ந்த செண்பகவல்லி (60) என்பவர் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியும் திருட்டு போனது. மேலும், சில பெண்களிடமும் சங்கிலி பறிப்பு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 16-ந்தேதி சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!
நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!
உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!
முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!