சமயபுரம் கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... 15 பேரிடம் செல்போன்கள் பறிப்பு; 12 பவுன் தங்க நகைகள் திருட்டு!

சமயபுரம் திருவிழா
சமயபுரம் திருவிழா

சமயபுரம் கோயில் தேர்த் திருவிழாவின்போது 15 பேரிடம் செல் போன் பறிப்பு மற்றும் 12 பவுன் தங்க நகைகள் திருட்டு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 15 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. மேலும், நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் (55) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

திருட்டு
திருட்டு

இதேபோல் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த லட்சுமியிடம் (60) இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி கைச்செயின் திருட்டுபோனது. மேலும், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஓமாந்தூர் கீழப்பட்டியை சேர்ந்த செண்பகவல்லி (60) என்பவர் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியும் திருட்டு போனது. மேலும், சில பெண்களிடமும் சங்கிலி பறிப்பு நடைபெற்றது.

சமயபுரம் திருவிழா
சமயபுரம் திருவிழா

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 16-ந்தேதி சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in