அரியலூர் ஆற்றுப்பாலத்தின் கீழ் முதியவர் சடலம்... அருகில் கிடந்த பொருட்களால் அதிர்ச்சி

முதியவர் சடலமாக மீட்பு
முதியவர் சடலமாக மீட்பு

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் பகுதியில் கொள்ளிடம் ஆறு அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இங்கு அமைந்துள்ளது. தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்து இருப்பதால், அப்பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் ஆடு மேய்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சலனமின்றி படுத்திருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து அருகில் சென்று பார்த்துள்ளனர்.

தா.பழூர் காவல் நிலையம்
தா.பழூர் காவல் நிலையம்

அப்போது அவருக்கு அருகே பூச்சி மருந்து பாட்டில் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தா.பழூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அருகில் சென்று பார்த்தபோது, முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அருகில் வைத்திருந்த பையை ஆய்வு செய்தபோது, அதில் முதியவரின் ஆதார் அடையாள அட்டை நகல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இறந்த முதியவர் தஞ்சாவூர் மாவட்டம் மருதநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (60) என்பது தெரியவந்தது.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை

இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போலீஸார் சடலத்தின் அருகே கிடந்த பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த முதியவர் எதற்காக இங்கு வந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in