உறங்கிக் கொண்டிருந்த ரவுடியை எழுப்பி வெட்டிக் கொலை செய்த கும்பல்...நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட ரவுடி அக்‌ஷய்
கொலை செய்யப்பட்ட ரவுடி அக்‌ஷய்

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ரவுடியை செல்போனில் வெளியே அழைத்து ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் மாண்டியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டியா
மாண்டியா

கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் உள்ள ஸ்வர்ண சந்த்ராவைச் சேர்நதவர் அக்‌ஷய் (24). பிரபல ரவுடியான அக்‌ஷய் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அக்‌ஷய் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால் செல்போனை எடுத்து பேசிக் கொண்டே அக்‌ஷய் தனது வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது இருளில் மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென அக்‌ஷய் மீது அரிவாள், வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது. இதில் ரத்த வெள்ளத்திலேயே அக்‌ஷய் உயிரிழந்தார். இதன் பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இக்கொலை குறித்து தகவல் அறிந்த மாண்டியா கிழக்கு காவல் நிலைய போலீஸார், விரைந்து சென்று அக்‌ஷய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாண்டியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த காலங்களில் அவருடன் இருந்த நண்பர்கள் பலர், அக்‌ஷய்க்கு எதிரிகளாக மாறியுள்ளனர் என்றும், அந்த முன் விரோதத்தில்அவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, அக்‌ஷயுடன் நட்பில் இருந்தவர்களின் பட்டியலை எடுத்து மாண்டியா கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறங்கிக் கொண்டிருந்த ரவுடியை செல்போனில் அழைத்து மர்மக்கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் மாண்டியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in