பகீர்... கட்டையால் அடித்து கணவர் கொலை: குடிபோதையில் மனைவி வெறிச்செயல்!

பகீர்... கட்டையால் அடித்து கணவர் கொலை: குடிபோதையில் மனைவி வெறிச்செயல்!

குடிபோதையில் கணவரை கட்டையால் மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் பத்தனம்திட்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், பத்தனம்திட்டாவில் மேற்கு ஆதிவாசி காலனி அட்டாடோ பகுதியைச் சேர்நதவர் ரத்னாகரன்(58). இவரது மனைவி சாந்தா. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு 11 மணியளவில் இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாந்தா, தனது கணவர் ரத்னாகரனை கட்டையால் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் ரத்னாகரன் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நிலக்கல்லில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் ரத்னாகரனை சோதனை செய்தனர். ஆனால், இவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போஸீருக்குத் தகவல் தெரிவித்தது. விரைந்து வந்த போலீஸார், ரத்னாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாந்தாவை கைது செய்தனர். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் தனது கணவர் ரத்னாகரனை சாந்தா கொலை செய்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

குடிபோதையில், தனது கணவனை மனைவியே அடித்துக் கொலை செய்த சம்பவம் பத்தனம்திட்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in