தஞ்சை அருகே மாடு மேய்க்க சென்ற தந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மகன் அளித்த புகாரின் பேரில் தடயவியல் நிபுணர்கள் சடலத்தை ஆய்வு செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கீழப்புனவாசல் எல்லவெட்டி தெருவில் வசித்து வந்தவர் முனிசாமி. இவர் நேற்று காலை 7 மணிக்கு தனக்கு சொந்தமான மாடு மற்றும் கன்றினை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். இரவு வரை முனிசாமி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அவர் வழக்கமாக மாடுகளை அழைத்து செல்லும் இடங்களுக்கு சென்று தேடி உள்ளனர்.
பல இடங்களில் தேடிய போது, வயல்வெளி ஒன்றில் முனிசாமி மல்லாந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாடு மற்றும் கன்று முனிசாமியின் உடல் அருகிலேயே நின்றிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த மருதூர் காவல் நிலைய போலீஸார் முனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இறந்த தனது தந்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முனிசாமியின் மகன் ராஜ்கண்ணு, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த முனிசாமியின் உடலை அவர்கள் சோதனை செய்தனர். இது தொடர்பான அறிக்கை விரைவில் போலீஸாருக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!
இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ