தெலங்கானா மாநிலத்தில் குற்றவாளிகளுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள மங்கள்ஹாட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேந்தர் ரெட்டி. இவர் சமீபத்தில், தனது பிறந்த நாளை குற்றவாளிகளுடன் சேர்ந்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் மகேந்தர் ரெட்டியின் செயலை கண்ட அம்மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் உண்மைதானா என்பது குறித்து விசாரணை நடத்த காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் நடத்திய விசாரணையில் மகேந்தர் ரெட்டி, குற்றவாளிகளுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. மேலும், கஞ்சா கடத்தல்காரர்கள், சூதாட்டம் மற்றும் பிற குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் இன்ஸ்பெக்டர் மகேந்தர் ரெட்டி நட்பை பராமரித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து, ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் கே. ஸ்ரீனிவாச ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் ஹைதராபாத் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!
இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ