சிகிச்சைக்கு வந்தவர் கொலை! வீட்டைச் சுற்றி மனித எலும்புகள்... சித்த வைத்தியரின் அதிர்ச்சி மறுபக்கம்!

சித்த வைத்தியர் வீட்டில் போலீஸார் சோதனை
சித்த வைத்தியர் வீட்டில் போலீஸார் சோதனை

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டை சுற்றிலும் ஏராளமான எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்த வைத்தியர் கேசவ மூர்த்தி
சித்த வைத்தியர் கேசவ மூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மணல்மேட்டைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் அசோக்ராஜன்(27). சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, திரும்பியபோது மாயமானார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். 

அசோக்ராஜனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதே பகுதியில் உள்ள சித்த வைத்தியரான கேசவமூர்த்தி(47) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அசோக் ராஜனை அவர் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

கைது செய்யப்பட்டுள்ள கேசவமூர்த்தி, அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத் செய்துள்ளார். அப்படி அசோக் ராஜனுக்கும்  செய்திருக்கிறார். அதில்  அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து கேசவமூர்த்தியை தொடர்பு கொண்டு அசோக்ராஜன் கேட்டதற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது தன்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேசவமூர்த்தி கூறியுள்ளார்.

அதன்படி, கடந்த 13-ம் தேதி கேசவமூர்த்தியை அசோக் ராஜன் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, தவறான சிகிச்சையால் அசோக்ராஜன் பாதிக்கப்பட்டதால், தான் போலி மருத்துவர் என்பது வெளியில் தெரிந்துவிடும் எனக் கருதி, அசோக் ராஜனை கொலை செய்ததாக கேசவமூர்த்தி  போலீஸாரிடம் கூறியுள்ளார்.

அசோக் ராஜன்
அசோக் ராஜன்

இதற்கிடையே, கேசவமூர்த்தியின் வீட்டுக்குள் இருந்த ஒரு பெட்டியில் இருந்து, சில மனித எலும்புகள், வெள்ளிச் சங்கிலி ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். மேலும், வீட்டைச் சுற்றிலும் பல இடங்களில் தோண்டிப் பார்த்தபோது ஏராளமான மனித எலும்புகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. எனவே, கேசவமூர்த்தியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


இதையும் வாசிக்கலாமே...

இன்று 17 மாவட்டங்களில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்... பத்திரமா இருங்க!

உஷார்... இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்… அதிரடி அறிவிப்பு!

புட்லூர் ரயில் நிலையத்தில் பகீர்! மனைவி கண்முன்னே கணவன் கழுத்தறுத்துக் கொலை

அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; அலறிய நோயாளிகள்!

கொட்டும் மழையில் ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in