அதிர்ச்சி; தலைக்கேறிய போதை: குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற தந்தை !

காவல் துறை
காவல் துறை

குடிபோதையில் 2 வயது குழந்தையைத் தரையில் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஷ்ரஃப். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சைஸ்தா என்பவரை திருமணம் செய்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான சைஸ்தா ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஷ்ரஃப் மற்றும் சைஸ்தா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான அஷ்ரஃப் அடிக்கடி சைஸ்தாவையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஷ்ரஃப், மனைவி மற்றும் 2 மகள்களையும் கொடூரமாக தாக்கினார். 2 வயது குழந்தையை ஓங்கி தரையில் பலமுறை அடித்தார். இதே போல 3 வயது பெண் குழந்தை மற்றும் அவரது மனைவி சைஸ்தா ஆகியோரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, சைஸ்தா மற்றும் அவரது 2 மகள்களும் மயங்கிக் கிடந்தனர். அவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கைது
கைது

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 2 வயது குழந்தை உயிரிழந்தது. மேலும் 3 வயது குழந்தை மாவட்ட மருத்துவமனையில் தனது தாயுடன் உயிருக்குப் போராடி வருகிறது. இறந்த குழந்தையின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் மகளை அடித்துக் கொலை செய்த அஷ்ரஃபை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in