சோகம்...மகன் தற்கொலை செய்த 13-வது நாளில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை!

தற்கொலை செய்த யாக்ஷித்
தற்கொலை செய்த யாக்ஷித்

தனது 14 வயது மகன் தற்கொலை செய்து கொண்ட 13-வது நாளில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகச்சம்பவம் பெல்தங்கடியில் நடைபெற்றுள்ளது.

சடலம்
சடலம்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள உஜிரே கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் பூஜாரி (41). இவர் மனைவி ரேஷ்மா. இவர்கள் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் யாக்ஷித் (14) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஜனவரி 4-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தன் தாயின் சேலையில் தூக்கிட்டு யாக்ஷித் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பெல்தங்கடி போலீஸார் நடத்தினர். அப்போது தன்னுடைய 6 வயது தம்பியுடன் யாக்ஷித் சண்டை போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின் யாக்ஷித் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் இறுதிச்சடங்களில் அவரது தந்தை யோகேஷ் பூஜாரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெல்தங்கடி  காவல் நிலையம்
பெல்தங்கடி காவல் நிலையம்

இந்த நிலையில், இன்று ரேஷ்மா தனது கணவரின் அறைக்குச் சென்ற போது அதிர்ச்சியடைந்தார். மகன் தற்கொலை செய்த அதே இடத்தில் யோகேஷ் பூஜாரியும் தூக்கில் தொங்கியிருந்தார். இதனால் ரேஷ்மா அறலறித் துடித்தார். அவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது யோகேஷ் பூஜாரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து, யோகேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மகன் இறந்த 13வது நாளில் அவரது தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in