கடலூரில் பேரூராட்சி நிதி தணிக்கைக்கு வந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் 24-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில், சேத்தியாதோப்பு தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் உள்ளாட்சி தணிக்கை செய்ய வந்தபோது, அங்கு நடைபெறும் முறைகேடுகளை மறைக்கும் விதமாக லஞ்சம் பெற இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசனின் வடலூர் வீடு மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கையின் உதவி இயக்குனர் பூங்குழலியின் கடலூர் வீடு, உள்ளாட்சி தணிக்கை குழுவின் ஆய்வாளர் விஜயலட்சுமி வீடு ஆகிய மூன்று இடங்களில் கடலூர் லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் போலீஸார் மூன்று பிரிவுகளாக சோதனை மேற்கொண்டனர்.
இவர்கள் வருமானத்திற்கு எதிராக பணம் சேர்த்துள்ளார்களா என்பது குறித்தும் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனை கடலூர் மாவட்ட அரசு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!
இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ