பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என கேட்டு பாஜக மாவட்ட செயலாளரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துமாணிக்கம்(50). இவர் பாரதிய ஜனதா கட்சியில் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 20 ஆம் தேதி முத்துமாணிக்கம், துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் அமர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றியது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பாஜக ஓபிசி அணி மண்டல தலைவர் டிக்காராம், 195 வார்டு தலைவர் வெங்கட், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் (நெசவாளர் அணி) மாரியம்மாள் உள்ளிட்ட சிலர் பூத் ஏஜென்ட் வேலை செய்ததற்கான பணம் ஏன் கொடுக்கவில்லை? எனக் கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முத்துமாணிக்கம் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உட்பட 8 பேர் மீது ஆபாசமாக பேசுதல், சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், பொருட்களை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாஜக நிர்வாகி வாசு, ஜெயக்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!
இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ