சென்னையில் பட்டப்பகலில் கொடூரக் கொலை... குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

கொலை
கொலை

சென்னை எழும்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, சௌகார்பேட்டையை சேர்ந்த செந்தில் கடந்த 2015ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சில நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சந்திரசேகர், ஜான்சன், கவிதா உட்பட 13 நபர்களை காவல் குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

அதில், கைது செய்யப்பட்ட சந்திரசேகர், ஜான்சன் மற்றும் கவிதா ஆகியோர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளதால், 3 குற்றவாளிகளுக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in