மதம் மாறாவிட்டால் ஏ.ஐ-வை பயன்படுத்தி ஆபாச வீடியோ உருவாக்குவேன்... கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்!

மதம் மாறாவிட்டால் ஏ.ஐ-வை பயன்படுத்தி ஆபாச வீடியோ உருவாக்குவேன்... கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்!
Updated on
2 min read

மதம் மாறாவிட்டால் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்குவேன் என்று இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் மற்றும் அவரது தந்தை மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் தந்தை, போஜிபூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அதில், தனது மகளை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு இளைஞர் ஒருவர் மிரட்டுகிறார். கடந்த மே 7-ம் தேதி எனது மகள் வாட்ஸ் அப்பிற்கு ஹாய் என்ற மெசேஜ் வந்தது. தெரியாத நபரிடம் இருந்து வந்த தகவலுக்கு என் மகள் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில், அதே எண்ணில் இருந்து ஒரு இளைஞர் பேசியுள்ளார். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் நீ இஸ்லாத்திற்கு மாறினால் உன்னை நன்றாக வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் என் மகள் பதில் சொல்லாமல் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

செல்போன்
செல்போன்

இந்த நிலையில், மே 19-ம் தேதி அதே எண்ணில் இருந்து என் மகளுக்கு ஆபாச செய்தி, ஆபாச வீடியோக்கள் வந்தன. இதை அவள் அழித்ததால் அந்த எண்ணில் இருந்து பேசிய இளைஞர், வீட்டுக்கு வந்து கடத்தி விடுவேன் என்று மிரட்டினார். இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்வேன் என்றும் மிரட்டினார்.

மேலும், மதம் மாறாவிட்டால், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், டியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்புவேன் என்று மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகளுக்கு வந்த செல்போன் அழைப்பின் எண்ணை சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பரேலியின் போஜிபூரைச் சேர்ந்த பைசல் என்பவரது செல்போன் எண் அது என்பது தெரிய வந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பைசலின் தந்தை அமீனுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!

அதிர்ச்சி... பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்... பதற்றத்தில் என்ஐஏ அலுவலகம்... தீவிர விசாரணை!

சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!

வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!

பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in