அதிர்ச்சி... தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் எரித்துக் கொலை!

எரிந்து கிடக்கும் இளம்பெண்ணின் உடல்.
எரிந்து கிடக்கும் இளம்பெண்ணின் உடல்.

தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தும்கூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தும்கூரின் குப்பி தாலுகாவில் டோட்குனி அருகே ஷிமோகா- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (206) உள்ளது. இந்த வழியே பெங்களூருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையின் அருகே எரிந்த நிலையில் பெண்ணின் உடல் இன்று காலையில் கிடந்துள்ளது.

இதைப் பார்த்து அப்பகுதி மக்கள், உடனடியாக சேலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பாதி எரிந்த நிலையில் இருந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர். முகம் முழுவதுமாக எரிக்கப்பட்டதால், அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்து உடலை மர்மநபர்கள் வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் உள்ளூரைச் சேர்ந்தவரா, வெளியூரைச் சேர்ந்தவரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தும்கூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in