பயங்கரம்... இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

மதுரை திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கனகவேல் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு  காரில் சென்று  தரிசனம் செய்துவிட்டு இன்று காலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். காரை கனகவேலின் மகன் மணிகண்டன் ஓட்டி வந்தார். அவர்களது கார் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது  இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரை கவனிக்காமல் திடீரென சாலையை கடக்க முயன்றார். அதனால்  அவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை வேகமாக திரும்பி இருக்கிறார் மணிகண்டன். 

ஆனாலும் இருசக்கர வாகனத்தில் மீது மோதிய கார், நிலைகுலைந்து சாலையில் கவிழ்ந்து உருண்டது. இதில் காரில் பயணித்த கனகவேல், அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, உறவினர் நாகஜோதி, கனகவேலின் இரட்டைக் குழந்தைகள் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த கொய்யாப்பழ வியாபாரியான பாண்டியும் இந்த விபத்தில் பலியானார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் பலியான சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...   
லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in