குடியிருப்பை சூழ்ந்த நெருப்பு... உயிர் தப்ப குளியலறையில் ஒளிந்த 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி

டெல்லி தீ விபத்தில் மீட்பு படையினர்
டெல்லி தீ விபத்தில் மீட்பு படையினர்

டெல்லியில் குடியிருப்பு ஒன்றில் எழுந்த நெருப்பிலிருந்து தப்பிக்க குளியலறையில் சென்று ஒளிந்த 2 சிறுமிகள், புகைமண்டலத்தால் மூச்சுத் திணறி பலியானார்கள்.

வடக்கு டெல்லியின் சதர் பஜார் பகுதியின் குடியிருப்பு ஒன்றில் இந்த அசம்பாவிதம் இன்று மதியம் நடந்தேறி இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த திடீர் நெருப்பிலிருந்து தப்பிக்க, குளியலறையில் சென்று பதுங்கிய 14 மற்றும் 12 வயது சகோதரிகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து இடத்தில் மீட்பு பணி
தீ விபத்து இடத்தில் மீட்பு பணி

பிற்பகல் 2.10 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு அழைப்பு வந்தது. 4 தீயணைப்பு வாகனங்கள் சதர் பஜார் சமேலியன் சாலையில் உள்ள விபத்து நிகழ்விடத்துக்கு விரைந்தன. குடியிருப்பு முழுக்கவும் தீப்பற்றியிருந்ததில், தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தீயை அணைக்க முயன்றனர்.

தீ ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகே கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களை போராடி மீட்க முடிந்தது. மேலும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று கிடைத்த தகவலை அடுத்து, ஆக்சிஜன் முகமூடிகள் சகிதம், தீயணைப்பு மீட்பு குழுவினர் எரியும் கட்டிடத்துக்குள் புகுந்தனர்.

குடியிருப்பின் ஒவ்வொரு அறையாக திறந்து சோதனையிட்டதில், முதல் தளத்தின் குளியலறை ஒன்றில் 2 சிறுமிகள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே 2 சிறுமிகளையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்திருப்பதை உறுதி செய்தனர்.

வீடு முழுக்க பற்றி எரிந்ததில், உயிர் தப்பும் நோக்கில் குளியலைறையில் சென்று இரு சகோதர சிறுமிகளும் ஒளிந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் நெருப்பிலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக்கொண்ட போதிலும், சுற்றிச்சூழ்ந்த புகை மண்டலத்தால் சுவாசிக்க வழியின்றி மயங்கி விழுந்துள்ளனர்.

நெருப்பு வளையத்தில் சிக்கிய பெரியவர்கள், அபயக்குரல் மூலம் மீட்பு படையினர் உதவியை கேட்டுப்பெற்று உயிர் தப்பினர். மயக்கத்தில் ஆழ்ந்த சிறுமிகளை மேலும் புகை மண்டலம் சூழ்ந்ததில், மயக்கத்திலேயே மூச்சுத் திணறி இறந்துள்ளனர்.

போலீஸார் விசாரணையில் இறந்த சிறுமிகளின் பெயர்கள் குலாஷ்னா (14) மற்றும் அனயா(12) எனத் தெரிய வந்துள்ளது. துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் மீனா தலைமையில் போலீஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்தும், இறந்தவர்களின் பின்னணி குறித்தும் மேலும் விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in