மகாதேவ் பந்தய செயலியை விளம்பரத்தியதற்காக நடிகை தமன்னா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அதனை ஓரங்கட்டிவிட்டு பட புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார் தமன்னா.
மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி தொடர்பான வழக்கு வேகமெடுத்துள்ள நிலையில் பாலிவுட் நடிகர் சாஹில் கான் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நடிகர்கள் ஷ்ரத்தா கபூர், ரன்பீர் கபூர், ஹூமா குரேஷி, தமன்னா பாட்டியா உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
’ஃபேர்பிளே ஆப்’ என்பது மகாதேவ் பந்தய செயலியின் துணை செயலியாகும். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக தமன்னாவை மகாராஷ்டிரா சைபர் செல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அந்தத் தேதியில் தான் மும்பையில் இல்லை எனவும், அதனால் வேறொரு தேதியில் விசாரணைக்கு வருவதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ‘அரண்மனை4’ படத்தின் தெலுங்கு புரோமோஷனுக்காக இன்று படக்குழு ஹைதராபாத் சென்றுள்ளது. தமன்னாவும் அந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்வில் கலந்து கொண்ட தமன்னா, ராஷி கண்ணா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை ராஷி கண்ணா, ‘அரண்மனை4’ படத்தின் கதை கேட்காமலேயே படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். தமன்னாவும் தெலுங்கு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்து வருகிறார். ’சொன்ன தேதியில் பந்த செயலி வழக்கில் விசாரணைக்குச் செல்லாமல் பட புரோமோஷன் முக்கியம் என சென்றுள்ளார் தமன்னா. அவர் சட்டத்தை மதிக்கவில்லையா?’ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!
நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!
உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!
முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!