ரூ.200 கோடி... மகளின் சினிமா என்ட்ரிக்காக செலவழிக்கும் நடிகர் ஷாருக்கான்!

மகளுடன் ஷாருக்கான்...
மகளுடன் ஷாருக்கான்...

மகன் இயக்குநராக தனது கரியரில் கவனம் செலுத்த மகள் சுஹானா கானை சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்துகிறார் நடிகர் ஷாருக்கான். இதற்காக, ரூ. 200 கோடி அவர் செலவழிக்கத் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'பாலிவுட் பாட்ஷா' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான் தனது வாரிசுகளை சினிமாவில் கோலோச்ச வைக்க தயாராகி வருகிறார். மகன் ஆர்யன் கான் இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருக்க, மகள் சுஹானா கானுக்கு நடிகையாக வேண்டும் என்று விருப்பம். மகள் விருப்பத்தை நிறைவேற்ற ரூ. 200 கோடி செலவழிக்கத் தயாராக இருக்கிறார் ஷாருக் என்ற விஷயம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஷாருக்கான் 2025-ல் சுஜோய் கோஷ் இயக்கத்தில் வெளியாகும் ‘கிங்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அவரது மகள் சுஹானா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மகள் அறிமுகமாகும் படம் என்பதால், படத்திற்கு ரூ. 200 கோடி பட்ஜெட் தர தயாராகி இருக்கிறார் ஷாருக்.

ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இந்தக் கதையில், உலக அளவிலான பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதில் ஷாருக்கான் தெளிவாக உள்ளாராம். இதனால், ரியல் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் விஎஃப்எக்ஸ் என அனைத்தும் தரமாக இருக்க வேண்டும் என இயக்குநரிடம் சொல்லி இருக்கிறார்.

2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுகுறித்து விரைவில் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். சுஹானா கடந்த ஆண்டு ஜோயா அக்தரின் ’தி ஆர்ச்சீஸ்’ படம் மூலம் அறிமுகமானார். ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் மூலம் நடிகையாக சுஹானா அறிமுகமாகி இருந்தாலும் பெரிய திரையில் தனது அப்பா படத்திலேயே அறிமுகமாக இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in