இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். பாரதிராஜா தனது மகன் மனோஜூடன் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை, தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை சற்று முன்னர் பதிவு செய்தார். ராஜ்யசபாவில் நியமன எம்பி-யாக இருக்கும் இளையராஜா காலையிலேயே தனது வாக்கை ஆர்வத்துடன் வந்து பதிவு செய்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “நாம் எல்லோரும் இந்திய குடிமக்கள். வாக்களிக்க வேண்டியது நமது கடமை. உங்களைப் போலவே நானும் இன்று வாக்களித்தேன்” என்று தெரிவித்தார்.
இளையராஜாவின் நண்பர் இயக்குநர் பாரதிராஜாவும் காலையிலேயே தனது மகன் மனோஜூடன் வந்து வாக்களித்தார். இருவரும் சென்னை, இந்தி பிரச்சார சபாவில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
காலை முதலே நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளைப் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். வாக்களித்த பின் இவர்கள், “வாக்களிப்பது நமது கடமை. முதல் தலைமுறை வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என வலியுறுத்திச் சென்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!
வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!
பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!