நடிகை மெளனி ராய் பேக்லெஸ் கவுனில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கிறங்கடித்திருக்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இந்தியில் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டான சீரியல் ‘நாகினி’. தமிழிலும் இந்த கதை டப் செய்யப்பட்டது. இதில் கவர்ச்சி நாகினியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை மெளனி ராய். 2018-ல் அக்ஷய் குமாரின் ’கோல்ட்’ படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் அறிமுகமானார்.
அயன் முகர்ஜியின் ‘பிரம்மாஸ்திரா’ படத்திலும் நடித்திருக்கிறார் மெளனி. சமீபத்தில், ஜூபின் நௌடியாலுடன் இணைந்து ‘தொடரா’ என்ற மியூசிக் ஆல்பம், ‘சுல்தான் ஆஃப் டெல்லி’ என்ற வெப் தொடர் என பிஸியாக வலம் வருபவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சிப் படங்களைப் பகிரவும் தவறுவதில்லை.
சமீபத்தைய நேர்காணில் ஒன்றில், தான் நடித்த ‘டெல்லி சுல்தான்’ மற்றும் ’பிரம்மாஸ்திரா’ போன்ற படங்கள் தன்னை ஒரு நடிகராக எப்படி மாற்றியது என்பது குறித்து பகிர்ந்து கொண்டார்.
’கோல்ட்’, ரா’, ‘மேட் இன் சைனா’ போன்ற படங்களில் நான் அசலான இந்தியப் பெண்ணாக நடித்திருப்பேன். குறிப்பாக ’நாகினி’ மற்றும் ’சதி’க்குப் பிறகு, ரசிகர்கள் என்னை சேலை அணிந்த இந்திய பெண்ணாக மட்டுமே பார்த்தார்கள்.
அந்த சமயத்தில் தான் எனக்கு ‘பிரம்மாஸ்திரா’ வாய்ப்பு வந்தது. அதில் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரம். அதுபோன்ற வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!
தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!
தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!
அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!
பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!