அக்கா, தங்கை அடுத்தடுத்து இறந்த சம்பவம் இந்தி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம் என்றுமே சோகத்தை ஏற்படுத்தும் ஒன்று. அதிலும் நம் பிரியத்துக்குரியவர்கள் இறப்பு என்றால் அந்த துக்கம் சொல்லி மாளாது. அப்படி இருக்கையில் சின்னத்திரை நடிகைகள் டோலி சோஹி (48) மற்றும் அவரது சகோதரி அமந்தீப் சோஹி இருவரும் அடுத்தடுத்து இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோலி சோஹி கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து கர்ப்பப்பை புற்றுநோயால் போராடி வந்திருக்கிறார். இன்று காலை அவர் உயிரிழந்தார்.
அவரது சகோதரி அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு காலமானார். இந்த செய்தியை அவரது சகோதரர் மனு கனத்த இதயத்துடன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்தியில் பல ஹிட் சீரியல்களில் இவர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மனு கூறும்போது, “இவர்களின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும். இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக நிற்பவர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு... தேசிய மகளிர் தினத்தில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு
பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!
சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?
ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!
ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?