சமந்தா முதல் நயன்தாரா வரை... உச்சத்தில் இருக்கும் போதே பிரேக் எடுத்த நடிகைகள்!

சமந்தா முதல் நயன்தாரா வரை... உச்சத்தில் இருக்கும் போதே பிரேக் எடுத்த நடிகைகள்!

திருமணம், குழந்தைகள் அல்லது பர்சனல் காரணங்களால் சினிமாவில் இருந்து விலகிய நடிகைகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சினிமாவில் மார்கெட் உச்சத்தில் இருக்கும்போதே பிரேக் எடுத்து கம்பேக் கொடுத்த நடிகைகளும் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். அந்த நடிகைகள் யார் யார்? என்ன காரணம் என்கிற லிஸ்ட் பார்க்கலாம் வாங்க...

சமந்தா:

திருமண விவாகரத்துக்குப் பிறகு சமந்தாவுக்கு சினிமா கரியர் உச்சத்தில் சென்றது என்றே சொல்லலாம். ’யசோதா’, ‘குஷி’ என படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தவருக்கு மையோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் தாக்கியது. இதனால், சினிமாவில் இருந்து ஆறு மாதங்கள் விலகி இருப்பதாக அறிவித்தார்.

சீக்கிரம் கம்பேக் கொடுப்பேன் என சொல்லி இருப்பவர், சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக தான் எடுத்த முடிவு நல்லதுதான் என்றும் கூறியிருக்கிறார். மனதளவில் புத்துணர்ச்சியாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் சமந்தா.

அனுஷ்கா ஷெட்டி:

தமிழ் சினிமாவின் ஸ்வீட்டி அனுஷ்கா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனுஷ்காவின் ஆறடி உயரத்திற்கும் தேர்ந்த அவரது நடிப்பிற்கும் அழகிற்கும் ரசிகர்கள் நிறைய பேர். எந்த சினிமா அவருக்கு பேரும் புகழும் கொடுத்ததோ அதே சினிமாவே அவரை பிரேக் எடுக்க வைத்தது.

‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா. ஆனால், ஒரு கட்டத்தில் கூட்டிய எடையை பெரிதும் குறைக்க முடியாமல் போனது. இதோடு சில உடல்நலப் பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ள சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார் அனுஷ்கா. அதன் பிறகு இப்போது மீண்டும் நடித்து வருகிறார்.

நயன்தாரா: 

சினிமாவில் தன் கரியரில் உச்சத்தில் இருந்தபோதே பிரேக் எடுத்த நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். காதல் தோல்விகளால் தனது கரியரில் அதிக சர்ச்சைகளை சந்தித்தார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் முறிவுகளால் துவண்டவர் தெலுங்கில் தான் நடித்த ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ படத்தைக் கடைசிப் படமாக அறிவித்தார். ஆனால், இதை அறிவித்த சில மாதங்களிலேயே ‘ராஜா ராணி’ மூலம் கம்பேக் கொடுத்து ஹிட்டடித்தார் நயன்.

ஜோதிகா:

ஜோதிகா
ஜோதிகா

தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜோதிகா. கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் ஜோதிகா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பின்பு, குழந்தைகள் பிறந்த பிறகு சினிமாவில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடிக்காமல் பிரேக் கொடுத்தார். பின்பு, ‘36 வயதினிலே’ படம் மூலமாக கம்பேக் கொடுத்தவரை ’வாடி ராசாத்தி’ என அதே அன்போடு வரவேற்றார்கள் சினிமா ரசிகர்கள்.

இதையும் வாசிக்கலாமே...

திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!

மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!

சச்சினின் 30 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... இளம் வீரர் முஷீர் கான் அபாரம்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் சிக்கியது குற்றவாளியா?

திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in