அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியிருந்தது பொதுவெளியில் சர்ச்சையானது. இந்த விஷயத்தில் நடிகை த்ரிஷாவுக்குத் திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதில் மிஷ்கினும் இணைந்துள்ளார்.
அண்மையில் அதிமுக முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜூ நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாகப் பொதுவெளியில் பேசினார். இவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இதற்காக நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக திரைத்துறையில் பலரும் குரல் கொடுத்தனர். இதற்கு முன்பு நடிகை த்ரிஷாவைப் பற்றி மன்சூர் அலிகான் அவதூறாகப் பேசியபோது, “திரைத்துறையில் இயங்கும் பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும்” என குரல்கள் எழுந்தது. இப்போது த்ரிஷாவுக்கு எதிரான அவதூறு குறித்து இயக்குநர், நடிகர் மிஷ்கினும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ’டபுள் டக்கர்’ படவிழாவில் பேசிய மிஷ்கின், “நடிப்பை கடவுளாக நினைத்துத்தான் பெண்கள் இந்தத் துறைக்குள் வருகிறார்கள். உங்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படி பேசுவீர்களா? ஒரு பெண்ணை பற்றி இப்படி எல்லாம் பேசாதீர்கள். தயவு செய்து இப்படி பேசாதீர்கள். பத்திரிக்கைகளிலும் இப்படி எழுத வேண்டாம். நான் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு நடிகையாக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அவர்களை உங்கள் மகளாக, தங்கையாக நினையுங்கள். ஏன் காதலியாகக் கூட நினைக்கலாம்; தவறு இல்லை. ஆனால், அந்த காதலிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். பெண்ணை அழ வைப்பது மிகப்பெரிய துரோகம்.
த்ரிஷாவை நான் இரண்டு முறை நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன். மிகவும் எளிமையான பெண். நல்ல முறையில் பழகக்கூடிய பெண். அதனால் இனிமேல் தேவையில்லாமல் பேச வேண்டாம்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!
ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!
தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?