தன்னைப் பற்றி நெகட்டிவாகவும், மரியாதை குறைவாகவும் பேசுபவர்களுக்கு அதுதான் சரியான தண்டனை என நடிகை த்ரிஷா கொந்தளித்துள்ளார்.
டிஜிட்டல் மீடியா யுகத்தில் இணையத்தில் சினிமா பிரபலங்கள் தான் அதிகளவு நெகட்டிவிட்டியை சந்திக்கிறார்கள். அப்படி தன் மீது நெகட்டிவிட்டி பரப்புபவர்கள் மற்றும் மரியாதை குறைவாக பேசுபவர்கள் பற்றி நடிகை த்ரிஷா கொந்தளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு த்ரிஷா நடித்திருந்த ‘கில்லி’ படம் ரீ-ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி முதல் நாள் முதல் ஷோ பார்க்க போனபோது எந்தளவுக்கு பதட்டமும் சந்தோஷமும் இருந்ததோ அப்படியே 20 வருடங்கள் கழித்து அன்றும் இருந்ததாக த்ரிஷா கூறினார்.
மேலும், படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் உற்சாகம் தன்னை முழுமையடையச் செய்வதாகவும் அவர் சொன்னார். வெளியான சில நாட்களிலேயே ‘கில்லி’ திரைப்படம் ரூ. 12 கோடிக்கும் அதிக வசூல் பெற்றிருப்பதால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா தன் மீது நெகட்டிவிட்டி பரப்புவர்களை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “என்னை யாராவது மரியாதைக் குறைவாக பேசுவதைப் பார்க்கும்போது திரும்ப பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றும். ஆனால், அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படி வளர்ந்திருப்பார்கள் என்பதையும் யோசித்துப் பார்ப்பேன்.
இதுவே அவர்களுக்கு போதுமான தண்டனை என நினைத்துக் கொள்வேன். ஒரு பாடி பில்டர் எப்போதும் வொர்க்கவுட் செய்ய புதிதாக வருபவரை ஜட்ஜ் செய்ய மாட்டார். அதுபோலதான் நம்முடைய வாழ்க்கை முறையும். நாம் யார் என்பது நமக்குத் தெரிந்தால் போதும்” என்றும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
செல்லத்தை யாருப்பா கலாய்ச்சீங்க...? என்று ரசிகர்கள் த்ரிஷாவின் பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!
இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!
கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!
கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!