நடிகை த்ரிஷா சென்னையில் இன்று காலை 10.30 மணியளவில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 10.30 மணியளவில் நடிகை த்ரிஷா தனது வாக்கை செலுத்தினார். காலை முதலே நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ் என திரைப்பிரபலங்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
’விடாமுயற்சி’, ‘விஸ்வாம்பரா’ எனத் தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக இருந்தாலும் நடிகை த்ரிஷா இன்று காலை தவறாமல் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வழக்கமாக தனது தாயாருடன் வாக்களிக்க வருவார் நடிகை த்ரிஷா. இந்த முறையும் இருவரும் வந்து வாக்களித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!
வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!
பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!