#Election2024: குறை மட்டும் சொல்றோம்; ஆனா ஓட்டு போட மாட்டோமா?... நடிகை ரம்யா பாண்டியன் கேள்வி!

நடிகை ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன்

"நாட்டினை விமர்சனம் செய்யும் நாம் வாக்களிக்க வருவதில்லை. கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வரவேண்டும்” என நடிகை ரம்யா பாண்டியன் பேட்டி கொடுத்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் தனது அக்கா மற்றும் அம்மா என குடும்பத்துடன் வரிசையில் நின்று இன்று மதியம் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேலும், ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதை, அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இதுபற்றி, வாக்களித்துவிட்டு அவர் கொடுத்துள்ள பேட்டியில், “நாம் அனைவரும் 100 சதவீத அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். அது நம் அனைவரின் கடமை.

நமது நாட்டினை பற்றி ரொம்ப குறை சொல்கிறோம். விமர்சனங்கள் செய்கிறோம். நல்லதுதான். ஆனால், அதை எல்லாம் மாற்ற நாம் வாக்களிக்க வேண்டும்.

அதைவிடுத்து, நாட்டினை மாற்றும் சக்தியாக தேர்தலில் வாக்களிக்க மறந்து விடுகிறோம். இது தவறு. நாம் அனைவரும் நிச்சயம் வாக்களித்து நம் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்” என்று வாக்காளர்களை அறிவுறுத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in