இந்த வீடு என் கண்ணீர், சந்தோஷம், நம்பிக்கை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறது... புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரச்சிதா!

நடிகை ரச்சிதா மகாலக்‌ஷ்மி
நடிகை ரச்சிதா மகாலக்‌ஷ்மி

நடிகை ரச்சிதா மகாலக்‌ஷ்மி தனது 33-வது பிறந்தநாளை தன் புதுவீட்டில் கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

’பிரிவோம் சந்திப்போம்’, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா. இவருக்கும் சின்னத்திரை நடிகர் தினேஷுக்கும் காதல் திருமணம் நடந்தது. ஆனால், இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த ஜோடி பிரிந்து வாழ்கிறது. ரச்சிதாவுடன் சேர்ந்து வாழ தினேஷ் பலமுறை சமாதானத்திற்கு வந்தபோதும் சேர்ந்து வாழ ரச்சிதா தயாராக இல்லை.

”ரச்சிதா விவாகரத்துக் கேட்டால் தயாராகவே இருக்கிறோம்” என தினேஷின் பெற்றோரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்தனர். இப்படியான சூழ்நிலையில்தான் ரச்சிதா இன்று தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்தநாளின் போது தனது புதுவீடு தனக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் எமோஷனலாகக் கூறியுள்ளார் ரச்சிதா.

இந்த வீடியோவைப் பகிர்ந்து, ’என்னுடைய வீட்டிற்கு உங்களை வரவேற்கிறேன். இந்த வீடு என் கண்ணீர், சந்தோஷம், நம்பிக்கை என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறது. என் பெற்றோர் ஆசியுடன் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய 33-வது பிறந்தநாளை என் சொந்த வீட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கையில் மதுக்கோப்பையுடன் டிவியில் பாடலைக் கேட்டு ரசித்தபடி கூறியுள்ளார்.

மேலும், ‘சுதந்திரம் என்பது உங்கள் இஷ்டத்திற்கு எல்லாவற்றையும் செய்வது இல்லை. சரியான விஷயத்தை செய்வது’ என்றும் ரச்சிதா கூறியுள்ளார். பிறந்தநாளுக்காக இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியல்களை தவிர்த்து விட்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார் ரச்சிதா.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in