அதிமுக பொதுச் செயலாளர் பேச்சாளர்களை மதிப்பதில்லை எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, அதிமுக நட்சத்திர பேச்சாளர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகை ஜெயதேவி.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் ஜெயதேவி தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “என்னை நட்சத்திர பேச்சாளராக நியமித்தது அம்மா ஜெயலலிதா தான். அதிமுக தற்போது பழைய நிர்வாகிகளை விட்டுவிட்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவியை கொடுக்கிறது. பேச்சாளர்களுக்கு அதிமுகவில் தற்போது மரியாதை இல்லை. அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். பழனிசாமி அவர்களை பார்க்கவே முடியவில்லை. அதிமுக நான்காக பிரிந்துள்ளது. தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை” என்றார்.
மேலும், “எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போதே எடப்பாடி பழனிசாமியை பார்க்க முடியவில்லை. நான் இங்கு மனம் நொந்து போய் வந்துள்ளேன். எனவே என் பொறுப்பை நான் ராஜினாமா செய்கிறேன். பல்வேறு அதிமுக பேச்சாளர்கள் இதை வெளியில் சொல்லாமல் உள்ளனர்.
மக்கள் தேர்ந்தெடுக்காத தலைவர் எடப்பாடி என்பதால் அவர் எங்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. தலைமையே கொள்கையை பின்பற்றுவதில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறும் எடப்பாடி பாஜகவை ஏன் விமர்சிப்பது இல்லை. யார் என் பேச்சிற்கு மரியாதை கொடுத்து என்னை அழைக்கிறார்களோ அந்தக் கட்சியில் இணைவேன்” என்றார் அதிரடியாக.
இதையும் வாசிக்கலாமே...
கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?
பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!
48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!
மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!