வாட்ஸப்பில் உருக்கம்... பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!

நடிகை அம்ரிதா பாண்டே
நடிகை அம்ரிதா பாண்டே

பிரபல நடிகை அம்ரிதா பாண்டே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன்பு வாட்ஸப்பில் வைத்திருந்த உருக்கமான ஸ்டேட்டஸ் மெசேஜ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

போஜ்புரி, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரிதா பாண்டே. படங்கள் மட்டுமல்லாது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா. கடந்த 2022-ல் மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் மும்பையில் வசித்து வந்த நிலையில், தனது சகோதரி வீணா பாண்டே திருமணத்திற்காக கணவருடன் வந்திருக்கிறார்.

திருமணம் முடிந்து சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்த அம்ரிதா பாண்டே தனது திரையுலக வாழ்க்கை குறித்து மிகுந்த கவலையிலும், மன அழுத்தத்திலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அம்ரிதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். மாலை 3.30 மணியளவில் அவரது சகோதரி அம்ரிதாவின் அறைக் கதவை நீண்ட நேரம் தட்டிப் பார்த்தும், அவர் திறக்காததால் கதவை உடைத்துப் பார்த்த போது தான் அவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அம்ரிதாவை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இறப்பதற்கு முன்பு அம்ரிதா தனது வாட்ஸப்பில், ‘இரண்டு படகுகளில் சவாரி செய்வது கடினமாக உள்ளது. அதனால், இரண்டையும் மூழ்கடித்து எனது பயணத்தை எளிதாக்கிக் கொண்டேன்’ என உருக்கமாக வைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in