”வெயில் அடிச்சாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது மக்கள் வாக்களிக்க வர வேண்டும்” என்று நடிகர், இயக்குநர் டி. ராஜேந்தர் தெரிவித்தார். சென்னை, தி. நகரில் இன்று அவர் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதலே தொடங்கிய நிலையில், பல பிரபலங்களும் தங்களது வாக்குகளை வரிசையில் நின்று செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் எனப் பன்முகம் கொண்ட டி. ராஜேந்தர் சென்னை, தி. நகரில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தண்டவாளத்துல ஓடுனாதான் ரயிலு. கோடைகாலத்துல அடிச்சாதான் வெயிலு. அதனால, எவ்வளவு வெயில் அடிச்சாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வாக்களிக்க மக்கள் வர வேண்டும். இயற்கையை மீறி மனிதர்கள் என்ன நினைத்தாலும் அது தோல்வியில் தான் முடியும். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மெய்ஞானம்தான் ஜெயிக்கும். அதுதான் நம் நாடு” என்றார்.
மேலும், “கடவுள் அருள் இருந்தால்தான் வாக்களிக்க முடியும். அது என் பாக்கியம். வாய் இருப்பவர்கள் எல்லாம் பேச முடியாது. வாய்ப்பிருந்தால் தான் வாக்களிக்க முடியும். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு நன்றி. இளைஞர்கள் உங்கள் வேலைகளை முடித்துவிட்டு பொறுமையாக மாலை கூட வாக்களிக்க வாருங்கள்” என்றார்.
மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சொல்லி நன்றி தெரிவித்து அங்கிருந்து விடை பெற்றார் டி.ஆர்.
இதையும் வாசிக்கலாமே...
வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!
வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!
பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!