நாளை ஆஜராகவும்! நடிகர் மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன்

மன்சூர் அலிகான்- நடிகை த்ரிஷா
மன்சூர் அலிகான்- நடிகை த்ரிஷா
Updated on
2 min read

நடிகை த்ரிஷா விவகாரத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தொடர்பாக அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், நடிகை த்ரிஷா குறித்து மிகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மன்சூர் அலிகான் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர், நடிகைகள், நடிகர் சங்கம் என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும் த்ரிஷா குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு மாநில மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியது. பின்னர் இது தொடர்பாக டிஜிபி சென்னை காவல் ஆணையருக்கு பரிந்துரைத்ததன் பேரில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 509 (பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல்) மற்றும் 354(A) (பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) ஆகிய இரு பிரிவின் வழக்குப்பதிவு செய்தனர்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

இதனை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து அவரை நேரடியாக அழைத்து நாளை விசாரணை நடத்த வேண்டி ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். போலீஸார் சம்மன் அனுப்பியதை அடுத்து மன்சூர் அலிகான் நாளை விசாரணைக்கு ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in