மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘சர்தார்2’ படத்திற்கான பூஜை போட்டுள்ளார். இதன் படப்பிடிப்பும் சீக்கிரம் தொடங்க உள்ளது.
’ஜப்பான்’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. பிரேம்குமார் இயக்கத்தில் ‘மெய்யழகன்’, நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளது. இதற்கடுத்து சத்தமில்லாமல் ‘சர்தார்2’ பணிகளையும் தொடங்கியுள்ளார் கார்த்தி.
கடந்த 2022-ல் மித்ரன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்தப் படம் சுமாரான வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என வெற்றி விழா வைத்து அறிவித்தார்கள்.
இந்த சூழ்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை நடந்து முடிந்துள்ளது. வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். கடந்த மாதத்தில் கல்லூரி விழா ஒன்றில் நடிகர் கார்த்தி பேசியபோது, அடுத்த வருடம் ‘கைதி2’ தொடங்கும் என அறிவித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் ரஜினியின் ‘கூலி’ படத்தைத் தொடங்க இருக்கிறார். ‘கூலி’, ‘சர்தார்2’ இரண்டும் இந்த வருடத்திற்குள் நிறைவடைந்தால் அடுத்து ‘கைதி2’ படத்தில் லோகேஷ்- கார்த்தி இருவரும் இணையலாம்.
இதையும் வாசிக்கலாமே...
வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!
இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ