மக்கள் நீதி மய்ய தலைவர், நடிகர் கமல்ஹாசன் சென்னையில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, “எல்லா தேர்தலும் முக்கியமானதுதான். அதனால், எல்லோரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
இந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள கமல்ஹாசன், திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் காலை ஏழு மணியளவில் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். பொதுமக்களோடு திரைப்பிரபலங்கள் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் எனப் பலரும் தங்கள் வாக்குகளை காலை முதலே உற்சாகமாகப் பதிவு செய்து வருகின்றனர்.
வாக்களிப்பதோடு நில்லாமல் வாக்களித்த பின்பு செய்தியாளர் களைச் சந்திக்கும் திரைப்பிரபலங்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!
வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!
பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!