
செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமில் பார்டோசெக் மக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளித்துள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை மக்களுக்கு வீசியுள்ளார். பணம் கொட்டும் பகுதிக்கு மக்கள் பைகளுடன் வந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.
உலகின் முதல் பண மழையின் வீடியோவை கமில் தனது பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை எடுக்க போட்டி போடும் காட்சியை காணலாம்.
பார்டோசெக்கின் இந்த நிகழ்வு சில எதிர்வினைகளை சந்தித்துள்ளது. சிலர் அவரது தாராள மனப்பான்மையை பாராட்டி இருந்தாலும் பலர் அவரை பணத்தை வீணடிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!
அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!
பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!
தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்