டி20 தொடரில் இந்திய அணி 4 போட்டிகளின் முடிவில் 3 – 1 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் இன்று நடைபெறும் இறுதி போட்டியிலும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடருக்கு பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் ஏற்கனவே ஓய்வெடுத்துள்ளனர். 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில், சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இளம் இந்திய அணி 4 போட்டிகளின் முடிவில் 3 – 1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அந்த வகையில் 2023 உலகக் கோப்பை தோல்விக்கு ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா கடைசி போட்டியிலும் வென்று இத்தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்க உள்ளது. மறுபுறம் முக்கிய வீரர்கள் இல்லாமல் சுமாராக விளையாடி இத்தொடரை இழந்த ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த நிம்மதியுடன் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்து நாடு திரும்ப தயாராகியுள்ளது.
அந்த வகையில் சம்பிரதாயத்திற்காக நடைபெற உள்ள இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 1969இல் தோற்றுவிக்கப்பட்டு 40,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இம்மைதானத்தில் 2012 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மக்களே உஷார்.. சென்னையை நெருங்குகிறது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
கேப்டனுக்காக காத்திருக்கும் கப்பல்... எழுந்து வரட்டும் விஜயகாந்த்!
நெவர்... நான் ஏன் மன்னிப்புக் கேட்கணும்? குஷ்பு ஆவேசப் பேட்டி
பகீர் வீடியோ: பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அலறியடித்து ஓட்டம்!
கனமழை... 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... பாதுகாப்பா இருங்க மக்களே!