பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி 
அரசியல்

கர்நாடகாவிற்கு 3வது முறையாக மோடி நாளை விஜயம்... பிரம்மாண்ட பொதுக்கூட்டம், பேரணியில் பங்கேற்கிறார்!

காமதேனு

கர்நாடகாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப்.20) நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் ஏப்.26 மற்றும் மே 7 தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இங்கு பாஜக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல்

இக்கட்சிக்கு மாண்டியா, ஹாசன், கோலார்(தனி) ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாண்டியாவில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பெங்களூரு ஊரக தொகுதியில் தேவகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத் போட்டியிடுகிறார்.

கர்நாடகாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனெவே இரண்டு முறை வந்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவது முறையாக நாளை(ஏப்.20) அவர் விஜயம் செய்கிறார். சிக்கபல்லாபூர், பெங்களூரைச் சுற்றியுள்ள மக்களவைத் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி

ஏப்.20 பிற்பகல் 3 மணியளவில் சிக்கபல்லாபூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூடடத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் கோலார் மக்கவைத் தொகுதி வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இதன் தொடர்ச்சியாக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு பிரம்மாண்ட பிரச்சார பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அவரின் வருகையால் கர்நாடகா மாநில பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT