நடிகர் சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் ரவிக்குமார்
நடிகர் சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் ரவிக்குமார் 
அரசியல்

இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு... சிவகார்த்திகேயன் பட இயக்குநர் ரவிக்குமார் அறிவிப்பு!

காமதேனு

இந்தியா கூட்டணிக்கே எனனது ஆதரவு என 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் வெளிப்படையாக தெரிவித்துள்ளது திரைத்துறையினர் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ரவிக்குமார்

தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகமே  ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து இயங்குவது வழக்கம் தான் என்றாலும் திரைப் பிரபலங்கள்  பலரும் வெளிப்படையாக தங்கள் ஆதரவை எந்த கட்சிக்கும் தெரிவிப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே வெளிப்படையாக கட்சியில் இணைந்தோ  அல்லது ஆதரவு தெரிவித்தோ செயல்படுவார்கள். 

ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பெரும்பாலானவர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் அவரது திரைத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால்தான் பெரும்பாலானவர்கள் வெளிப்படையாக தங்கள் ஆதரவை தெரிவிப்பதில்லை. 

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தன்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்கு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.' நேற்று இன்று நாளை' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவிக்குமார் தற்போது முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு தனது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களான சச்சிதானந்தம், சு.வெங்கடேசன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டு இந்தியா கூட்டணிக்கு எனது ஆதரவு என்று அவர் தெரிவித்துள்ளார். இது திரை உலகம் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

SCROLL FOR NEXT