சாத்தூர் அருகே மதுபோதையில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை கட்டையால் அடித்துக் கொன்ற பெற்றோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் அய்யனார். இவர் தனது தந்தையுடன் கட்டடம் கட்டும் பணியில் (சென்ட்ரிங்) வேலை செய்து வந்தார். வேலைக்கு சென்றாலும் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான அய்யனார், வீட்டில் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அய்யனார் வீட்டில் ரூபாய் ஐந்து லட்சம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்த அவரது பாட்டியை அய்யனார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தந்தை சுப்பிரமணியன் மற்றும் அவரது தாய் பேச்சியம்மாள் ஆகிய இருவரும் மகன் அய்யனாரை பலமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குளம் போலீஸார், அய்யனாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அய்யனார் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, பெற்றோர் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மது போதைக்கு அடிமையான மகனை பெற்றோர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?
நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!
ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!
விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!
ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்