கைது செய்யப்பட்ட சுருளிராஜன்
கைது செய்யப்பட்ட சுருளிராஜன் BG
க்ரைம்

ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல்... பாமக பிரமுகர் கைது!

காமதேனு

கடலூர் அருகே உணவகத்தில் ஓசி சிக்கன் நூடுல்ஸ் மற்றும் சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளர், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி பங்களா அருகில் விருத்தாசலம் சாலையில் ஜாகிர் உசேன் (38) என்பவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தெற்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவரும், புவனகிரி பாமக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சுருளிராஜன் (31) என்பவர் கடந்த புதன்கிழமை இரவு சென்றுள்ள நிலையில், கடைக்காரரிடம் 10 சிக்கன் நூடுல்ஸ், 5 சிக்கன் ரைஸ் பார்சல் கட்ட சொல்லி உள்ளார்.

ஹோட்டலில் ஓசி உணவுகள் கேட்டு மிரட்டல்

அவர் கேட்டது போல் கடைக்காரரும் பார்சல் கட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை அவரிடம் கேட்டுள்ளார். அப்போது சுருளிராஜன், ”நான் யார் தெரியுமா? என்கிட்டயே பணம் கேட்கிறாயா?” என அதட்டி பேசி கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தன்னிடம் பணம் கேட்டால் கடையை அடித்து உடைத்து விடுவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

புவனகிரி காவல் நிலையம்

இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர், இது குறித்து புவனகிரி போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீஸார், பாமக புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுருளிராஜன் மேல் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று இரவு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

SCROLL FOR NEXT